Tuesday, April 13, 2010

என் வாழ்க்கையை புரட்டி போட்டது 3

பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ,என்னப்பா ஆச்சு மெதுவா எந்திரி என்றார்கள்.என்னால் எந்திரிக்கமுடியவில்லை. காலில் பயங்கர வலி தாங்கமுடியவில்லை. நான் என் நண்பர்களுக்கு  போன்செய்து அழைத்நதேன். அதற்க்குல் பக்கத்தில் இருந்தவர் 108 ஆம்புலன்சுக்கு போன் பன்னினார் . போன் செய்த 10 நிமிடத்தில் வன்டி வந்துவிட்டது.அதில் இருந்தவர்கள் மிக லாவகமாக வன்டியில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொன்டுசென்றார்கள்.

என் வாழ்க்கையை புரட்டி போட்டது 2

மேட்டின் இறக்கத்தில் என் வன்டி மிக வேகமாக இறங்கியது.அப்பொழுதுதான் பார்த்தேன் டீ கடை முன்பு ஒரு மினிடோர் ஆட்டோ நின்றுகொண்டிருந்தது. நான் ஆட்டோ அருகில் வருகிறென் 5 அடி இருக்கும் போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.திடீரென்று ஆட்டோ வலது பக்கம் திரும்பியது.எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் என் வன்டியை வலது பக்கம் சென்று ஆட்டோவை சுத்தி செல் என்று என் உள்உனர்வு சொல்ல, அப்படியெ நானும் செய்தென்.ஆட்டோவும் திரும்ப நானும் சுத்தி செல்ல கடைசீ நிமிடத்தில் எனது இடது கால் ஆட்டோவின் கதவில் மோதி வன்ட்டியை தான்டி விழுந்தேன்.

Thursday, April 08, 2010

என் வாழ்க்கையை புரட்டி போட்டது 1

நான் அதிகாலை 2 மணி அளவில் வீட்டை விட்டு கிளம்பினேன். வன்டியில் ஜாலியாக பாட்டு கெட்டுக்கொன்டெ சென்றுகொன்டிருந்தென். மிக சரியாக 2.45 மணிக்கு பெரியநாயக்கன்பளையம் சென்றுவிட்டென்.கல்யாண வீட்டுக்காரர்கள் 4 மணிக்கு வந்தார்கள் பின் காரியம் ஆரம்பித்து நல்லபடியாக முடித்து 5.50க்கு வண்டியை கிளப்பி கல்யாண நிகழ்ச்சியை மனதில் அசை போட்டபடி வன்டியில் 60கிலோ மீட்டர் வேகத்தில் வந்துகொன்டிருன்தேன் . டீச்சர்ஸ் காலனி மேடு ஏறும்போது கன்னியாகுமரி டூ ஊட்டி எக்ஸ்பிரஸ் பஸ் என்னை தான்டி சென்றது.உடனெ நான் நிகழ்காலத்திர்க்கு வந்தென் . நான் என் வன்டியை இன்னும் முறுக்கிய படி வேகம் எடுத்தேன் .மேட்டு முடிவில் பஸ்ஸின் வேகம் கம்மியாச்சு.இறக்கத்தில் என் வன்டி பயங்கற வேகத்தில் இறங்கியது.என் மனதில் மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை.அப்பொழுது தான் பார்த்தேன் சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஒரு மினிடோர் ஆட்டோ டீ கடை முன்பு நின்று கொண்டிருந்த்தது

Wednesday, April 07, 2010

வாழ்க்கை என்பது என்ன என்று தெரியும் முன்பெ நான் அதை கடந்துவிட்டென்.